தமிழகத்தில் ஒரே நாளில் 76 பேருக்கு கொரோனா..பாதிப்பு 1,596 ஆக அதிகரிப்பு.!

Default Image

தமிழகத்தில் ஒரே நாளில் 76 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதில் சென்னையில் மட்டும் 55 பேருக்கு கொரோனா உறுதியானது.

தமிழகத்தில் இன்று மேலும் 76 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே 1,520 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 1,596 ஆக உயர்ந்துள்ளது. இன்று மேலும் ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டுமே 178 பேர் குணமடைந்து, மொத்தம் 635 பேர் இதுவரை வீடு திரும்பியுள்ளனர்.

இதையடுத்து இன்று ஒரே நாளில் 6,060 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 53,045 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அதில், 1,596 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தற்போது 940 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். வீட்டு கண்காணிப்பில் 22,254 பேர் இருக்கின்றனர். அரசு கண்காணிப்பில் 145 பேர் உள்ளனர். மேலும் 28 நாட்கள் கண்காணிப்பு முடிந்து இதுவரை 87,159 பேர் வீடு திருப்பியுள்ளார்கள். இன்று அதிகபட்சமாக சென்னையில் 55 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் அங்கு 358 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்