இந்தியாவை விடாமல் துரத்தும் கொரோனா.! பாதிப்பு 17,656 ஆக உயர்வு.!

Default Image

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,265 லிருந்து 17,656 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவின் தாக்கம் குறையாமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் விளைவு காரணமாக ஊரடங்கு உத்தரவு மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அப்படி இருந்தும் நாளுக்கு நாள் பாதிப்பு, உயிரிழப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் தற்போதைய நிலவரப்படி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,656 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு 559 பேர் பலியாகியுள்ளனர். மேலும் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இதுவரை 2,842 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனிடையே நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,553 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 36 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்