ஊரடங்கு தளர்வு கிடையாது – டெல்லி மந்திரி கெஜ்ரிவால் விளக்கம்!

Default Image

கொரோனா தாக்கம் டெல்லியில் அதிகம் உள்ளது. ஊரடங்கு தளர்வு கிடையாது என முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி.

கொரோனா வைரஸின் தாக்கம் பல நாடுகளை ஆட்டி படைத்தது கொண்டு வரும் நிலையில், டெல்லியிலும் இதன் தாக்கம் அதிகமாக தான் உள்ளது.

இது குறித்து அம்மாநிலத்தின் முதல் மந்திரி கெஜ்ரிவால் கூறுகையில், இந்தியா முழுவதுமான மக்கள் தொகையில் டெல்லியில் 2 சதவீத மக்கள் மட்டுமே வசிக்கின்றனர். ஆனால், கொரோனா பாதிப்பை பொறுத்தவரையில் டெல்லியில் மட்டும் 12 சதவிகிதம் உள்ளது.

ஊரடங்கு தளர்த்தப்படமாட்டாது, ஆனால் மக்கள் இதனால் படும் கஷ்டங்களை நான் அறிவேன். இருப்பினும் மக்களின் உடல் நலத்தை கருத்தில் கொண்டே இந்த ஊரடங்கு அமலில் உள்ளது என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்