கண்நோயை குணப்படுத்தும் நந்தியாவட்டை பூ!

Default Image
நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், கண்நோய்களை சரிசெய்ய கூடியதும், உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கவல்லதும், புண்களை ஆற்ற கூடியதுமான நந்தியாவட்டையின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம்.
நந்தியாவட்டை அடுக்கான மலர்களை உடையது. வெள்ளை நிறப்பூக்களை உடைய இது கண்நோய்க்கு மருந்தாகிறது. பூக்கள் கண் எரிச்சலை, கண் சிவந்த நிலையை போக்குகிறது. பற்களை பலப்படுத்தும். நுண்கிருமிகளை அழிக்க கூடியது. வயிற்று பூச்சிகளை வெளித்தள்ளும்.  நந்தியாவட்டை பூக்களை பயன்படுத்தி கண்நோய்களுக்கான மருந்து தயாரிக்கலாம். 
தேவையான பொருட்கள்: நந்தியாவட்டை பூக்கள், நல்லெண்ணெய். செய்முறை: நந்தியாவட்டை பூக்களின் இதழ்களை நீர்விடாமல் அரைத்து எடுக்கவும். இதனுடன் நல்லெண்ணெய் விட்டு தைலமாக காய்ச்சி வடிகட்டி ஆறவைத்து எடுக்கவும். இதை வடிகட்டி கண்களை சுற்றியுள்ள கருவளையம் மீது பூசும்போது கருவளையம் இல்லாமல் போகும். நந்தியாவட்டை பூக்கள் மெழுகை போன்றது. மேல்பற்றாக போடும்போது பூஞ்சைக் காளான்களை போக்கும். 
இந்த பூ குளிர்ச்சி தரக்கூடியது என்பதால், கண்களில் மேல் வைத்திருப்பதாலோ அல்லது தண்ணீரில் பூவை ஊறவைத்து, அந்த நீரை கொண்டு கண்களை கழுவுவதாலோ கண் எரிச்சல் சரியாகும். பார்வை தெளிவுபெறும். நந்தியாவட்டை பூக்களை சுத்தம் செய்து கசக்கி ஓரிரு சொட்டுகள்  கண்ணில் விடுவதால் கண்படலம் சரியாகும்.
நந்தியாவட்டை இலைகளை பயன்படுத்தி உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: நந்தியாவட்டை இலைகள், மிளகு, சீரகம்.செய்முறை: ஒரு பாத்திரத்தில், நந்தியாவட்டை இலைகள் 5 எடுத்து துண்டுகளாக்கி போடவும். இதனுடன் 10 மிளகு, சிறிது சீரகம் சேர்த்து தட்டி போடவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி தினமும் காலையில், குடித்துவர உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும். இது, வலி நிவாரணியாக விளங்குகிறது. வாய்கொப்பளித்து வர பல் வலி குணமாகும். 
நந்தியாவட்டை இலைகளை பயன்படுத்தி புண்களை ஆற்றும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: நந்தியாவட்டை இலை, தேங்காய் எண்ணெய். செய்முறை: ஒரு பாத்திரத்தில் சிறிது தேங்காய் எண்ணெய் எடுக்கவும். இதில், நந்தியாவட்டை இலைகளை நீர்விடாமல் அரைத்து சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சி ஆறவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதை மேல்பூச்சாக பயன்படுத்திவர வெட்டுக்காயம், சிராய்ப்பு காயம், ஆறாத புண்கள் ஆறும்.
அடிக்கடி ஏற்படும் வாந்தியை கட்டுப்படுத்தும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் சதக்குப்பை என்ற மூலிகையை வாங்கி, ஒரு ஸ்பூன் நீரில் இட்டு கொதிக்க வைக்கவும். இதனுடன் தேன் சேர்த்து குடித்துவர உடலில் உள்ள உஷ்ணம், பித்தம் வெளியேறும். அடிக்கடி ஏற்படும் வாந்தி பிரச்னை சரியாகும்.
Posted in UncategorizedTagged

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்