உலக அழகிப் போட்டியில் வியட்நாமை சேர்ந்தவர் பட்டம்!

வியட்நாமைச் சேர்ந்த திருநங்கை  தாய்லாந்து நாட்டின் பட்டாயா (PATTAYA) நகரில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான உலக அழகிப் போட்டியில் பட்டம் வென்றார். அழகிப் போட்டிக்காக அமைக்கப்பட்ட பிரமாண்டமான மேடையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இதனைத் தொடர்ந்து விதவிதமான உடையலங்காரங்களில் திருநங்கைகள் ஒய்யார நடைபோட்டனர்.

அழகிப்பட்டம் வென்ற வியட்நாம் திருநங்கையான குயன் ஹெங் கியாங்(Nguyen Houng Giang) உலக அளவில் மூன்றாம் பாலினத்தவருக்கு சமஉரிமை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். இப்போட்டியில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை ஆஸ்த்திரேலியா மற்றும் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் வென்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment