கொரோனாவில் இருந்து 6 லட்சம் பேர் மீண்டனர்.! பலி 1,60,784 ஆக உயர்வு.!

Default Image

உலகளவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 6,00,006 பேர் குணமடைந்துள்ளனர்.

சீனாவில் உஹான் மாகாணத்தில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக முழுவதும் சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி, உயிர்களை கொன்று குவித்து வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒரு பகுதியாக பல நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. சீனாவில் சுமார் 70 நாட்களுக்கு பிறகு இயல்பு நிலை திரும்பியுள்ளது. ஆனால் வைரஸ் சீனாவை விட்டு விலகி மற்ற நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் பாதிப்பும், உயிரிழப்பும் தினந்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், உலகளவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 6,00,006 பேர் குணமடைந்துள்ளனர். இந்த கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,32,466 ஆக உயர்ந்து, உயிரிழப்பின் எண்ணிக்கை 1,60,784 ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 7,38,923 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 39,015 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதையடுத்து ஸ்பெயின் நாட்டில் 1,94,416 பேர் பாதிக்கப்பட்டு, 20,639 பேர் பலியாகியுள்ளனர். இத்தாலியில் 1,75,925 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 23,227 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்