BREAKING:தமிழகத்திற்கு மேலும் 12,000 ரேபிட் டெஸ்ட் கிட்.!

Default Image

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று இதுவரை இந்தியாவில் 14000 தாண்டியது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனாவை விரைவாக கண்டறிய இந்தியா , சீனாவிடம் இருந்து 6.5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளை ஆர்டர் செய்திருந்தது.
தற்போது முதற்கட்டமாக நேற்று முன்தினம்  3 லட்சம் ரேபிட் கிட்கள் இந்தியாவிற்கு வந்துள்ளன. இந்நிலையில் கொரோனா பரிசோதனை விரைவாக மேற்கொள்ள சீனாவில் இருந்து கொள்முதல் செய்த ரேபிட் டெஸ்ட் கிட்டுகளில்  தமிழகத்திற்கு மத்திய அரசு  12,000 ஒதுக்கிய இருந்த நிலையில் அந்த ரேபிட் டெஸ்ட் கிட்கள்  இன்று தமிழகம் வந்தடைந்தன.
தமிழக அரசு ஆர்டர் செய்திருந்த 24,000 ரேபிட் டெஸ்ட் கிட்கள் நேற்று வந்தன இதனால் தற்போது தமிழகத்தில் 36,000 ரேபிட் டெஸ்ட் கிட்கள் உள்ளன.இந்தியாவில் அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்