இந்த மாவட்டத்தில் இறைச்சி, மீன் கடைகள் இயங்க தடை.!
இறைச்சி வாங்கும் போது பொதுமக்கள் சமூக இடைவெளி பின்பற்றவில்லை என பல மாவட்டங்களில் இறைச்சி கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது மதுரை மாவட்டத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை அதாவது ஏப்ரல் 19-ம் தேதி இறைச்சி, மீன் கடைகள் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வினய் தெரிவித்துள்ளார்.
நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் பலர் இறைச்சி வாங்க வருவர்கள் என்பதால் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் தமிழகம் மூன்றாம் இடத்தில உள்ளது.
தமிழகத்தில் அத்திவாசிய பொருள்களை வாங்க வரும்போது சமூக இடைவெளி மற்றும் மாஸ்க் அணியவேண்டும் என அரசு தரப்பில் இருந்து அறிவுறுத்தி வருகிறது.ஆனால் பலர் அரசு கூறுவதை கடைபிடித்ததில்லை என எழுந்து வருகிறது என்பது குறிப்பிடதக்கது.