பிலிப்பைன்ஸில் கொரோனோவுக்கு பலியான 29 நாள் பிஞ்சு

Default Image

பிலிப்பைன்ஸில் 29 நாட்களே ஆன குழந்தை கொரோனாவுக்கு  உயிரிழந்துள்ளது உலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது .இதுதான் கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்பில் மிக இளையவயது உயிரிழப்பாகவும் .
கடந்த செவ்வாய்க்கிழமை குழந்தைக்கு தீவிர மூச்சுதிணறல் இருந்ததால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டதாகவும்,மேலும் அக்குழந்தைக்கு நடத்தப்பட்ட  கொரோனா வைரஸ் சோதனையில் வைரஸ் தாக்கம் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது .இதனை அந்நாட்டின் சுகாதார மந்திரி மரியா ரொசாரியோ வெர்ஜெய்ர் உறுதிப்படுத்தியுள்ளார் .
பிறந்து 29 நாட்களே ஆன குழந்தை இவ்வுலகத்தை பார்த்து ரசிக்காமல் கொரோனா என்னும் கொடூரனுக்கு உயிரிழந்துள்ளது.கொரோனாக்கு வயது வயது யார் என்று பார்த்து தாக்குவதில்லை என்பதற்கு இது ஒரு சான்று .
பிலிப்பைன்ஸில் மொத்தம் இதுவரை  5,453 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 349 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்