கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 941 பேருக்கு கொரோனா.!

Default Image

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 941 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 37 பேர் உயிரிழந்த நிலையில், 183 பேர் குணமடைந்தாகவும் சுகாதார அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அத்துடன் நாட்டில் 325 மாவட்டங்களில் கொரோனா தொற்று இல்லை என்றும் 170 மாவட்டங்களை ஹாட்ஸ்பாட்களாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனிடையே இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,380 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 414 ஆக இருக்கும் நிலையில், 1,489 பேர் குணமடைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்