புதுச்சேரியில் பெண் போலீசாரிடம் ஆபாசமாக நடந்துகொண்ட எஸ்பி சுபாஷ் கைது

Default Image

புதுச்சேரியில்  ஆபாசமாக நடந்துகொண்ட  எஸ்பி சுபாஷ்  என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால் மக்கள் வெளியே வரக்கூடாது என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. போலீசார் மக்கள் கூடுவதை தடுக்க தொடர்ந்து பணிபுரிந்து வருகின்றனர்.
இதற்குஇடையில் தான் போலீசார் ஒருவரின் செயல் மக்கள் மத்தியில் அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளது.சுபாஷ் என்பவர் புதுச்சேரி ஐஆர்பிஎன் பிரிவு எஸ்.பி ஆவார்.இவருக்கு இந்த ஊரடங்கு சமயத்தில்  திருபுவனை, மதகடிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில்  கண்காணிப்பு பணி ஒதுக்கப்பட்டிருந்தது.இதே பகுதியில் பணியில் இருந்த பெண் போலீசாரிடம் ஆபாசமாக புகார் அளிக்கப்பட்டது.இதன் பின் நடைபெற்ற விசாரணையில் எஸ்.பி.சுபாஷ் ஆபாசமாக நடந்து கொண்டது உறுதியானது.இதனால்  திருபுவனை காவல்நிலைய போலீசார் சுபாஷ் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.  சுபாஷிடம் தொடர்ந்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்