இந்தியாவில் மிரட்டும் கொரோனா – பலி எண்ணிக்கை 392..பாதிப்பு 11,933 ஆக உயர்வு.!

Default Image

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் தீவிரமடைந்து வருவதால், நேற்றுடன் முடிவடைய இருந்த ஊரடங்கு மே 3 ஆம் தேதி வரை நீடிக்கப்படுவதாக பிரதமர் மோடி காணொளிக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு அறிவித்தார். இதையடுத்து ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு ஊரடங்கில் நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்கும் என்று தெரிவித்தார். பின்னர் அதற்கான புதிய வழிகாட்டி நெறிமுறைகளை இன்று காலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. இதனிடையே இந்தியாவில் தினந்தோறும் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போதைய நிலவரப்படி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11933 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 392 ஆகவும் உயர்ந்துள்ளது. மேலும் வைரஸிலிருந்து 1344 பேர் குணமடைந்துள்ளார்கள் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்