ராகுல்காந்தி கருத்து ராஜீவ் கொலை விவகாரத்தில், மனிதநேயமானது!

Default Image

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் , காவிரி விவகாரத்தில் தமிழக எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் கமல்ஹாசன், மொடக்குறிச்சி பேருந்து நிறுத்தத்தில் தனது கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் தொண்டர்களிடையே பேசிய அவர், அரசு செய்ய வேண்டிய வேலைகளை, செய்யாத காரணத்தினாலேயே தாங்கள் அரசியலுக்கு வந்திருப்பதாக கூறினார்.

மொடக்குறிச்சியில் இருந்து, ஈரோடு பெரியார் வீதியில் உள்ள தந்தை பெரியாரின் பூர்வீக இல்லத்துக்குச் சென்ற கமல்ஹாசன், அங்கிருந்த ஓவியங்களை பார்வையிட்டார்.

பின்னர் ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், மாற்றம் வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பதாகவும், அதே எதிர்பார்ப்பு தமக்கும் இருப்பதாகவும் தெரிவித்தார். தமிழக அமைச்சர்கள் குறித்து தாம் நேர்மையாக விமர்சிப்பதாகவும், ஆனால், நேர்மையில்லாவிட்டாலும், தன்னை விமர்சிக்க அமைச்சர்களுக்கு கடமையாக இருப்பதாகவும் அவர் கூறினார். காவிரி விவகாரத்தில் தமிழக எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்திய கமல்ஹாசன், அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை நிறைவேற்ற மூன்றாவது தலைமுறையாக கேட்டு வந்தாலும், இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்று குற்றஞ்சாட்டினார்.

ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் கட்சிக்கொடி ஏற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல்ஹாசனை பார்த்து, அவரது தொண்டர்களும், ரசிகர்களும் உற்சாகத்தில் காணப்பட்டனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்