தமிழகத்தில் 10 வயதுக்குட்பட்ட 31 குழந்தைகளுக்கு கொரோனா உறுதி .!

Default Image

தமிழகத்தில்  நேற்றுவரை  1075 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று மட்டும் 98 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

இதனால் கொரோனா பாதிப்பு 1173 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆகவும் ,   குணமடைந்து வீடு திரும்பியோர்   எண்ணிக்கை 58 ஆக உள்ளது என தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில்,  தமிழகத்தில் 10 வயதுக்குட்பட்ட 31 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் அதிகபட்சமாக சென்னையில் 208, கோயம்புத்தூரில் 126, திருப்பூரில் 78, ஈரோடு 64, திண்டுக்கல், திருநெல்வேலி தலா 56 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்