எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா.!

Default Image

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் விபரங்கள் வெளியீடு.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 969 ஆக இருந்த நிலையில், தற்போது கொரோனா பாதிப்பு 1075 ஆக உள்ளது. ஏற்கனவே 10 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்து, 11 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து 50 பேர் வைரஸில் இருந்து குணமடைந்துள்ளார்கள் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறியுள்ளார். இந்த நிலையில் தமிழகத்தில் எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று விபரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை 199, கோயம்பத்தூர் 119, ஈரோடு 64, திருப்பூர் 60, திண்டுக்கல், திருநெல்வேலி தலா 56, நாமக்கல் 45, செங்கல்பட்டு, திருச்சி தலா 43, தேனி 41, ராணிப்பேட் 39, திருவள்ளூர் 29, கரூர், மதுரை தலா 25, நாகை, தூத்துக்குடி தலா 24, விழுப்புரம் 23, கடலூர் 19, சேலம் 17, திருப்பத்தூர் 16, கன்னியாகுமரி 15, திருவாரூர் 13, வேலூர் 12, தஞ்சாவூர், திருவண்ணாமலை, விருதுநகர் தலா 11, நீலகிரி 9, காஞ்சிபுரம் 8, சிவகங்கை 6, தென்காசி 5, கள்ளக்குறிச்சி 3, ராமநாதபுரம் 2, அரியலூர் 1, பெரம்பலூர் 1 என தமிழகத்தில் 34 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் 23 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன. அதில் அரசு மருத்துவமனையில் 14 மற்றும் தனியார் மருத்துவமனையில் 9 என மொத்தம் 23 பரிசோதனை மையங்கள் இருக்கின்றது என பீலா ராஜேஸ் தெரிவித்துள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்