இனி 3 நாட்கள் மட்டுமே மளிகை கடைகள் இயங்க வேண்டும் – புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்

Default Image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இனி வாரத்துக்கு 3 நாட்கள் மட்டுமே மளிகை கடைகளை திறக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.  இதனால், ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் தங்கள் மாவட்டத்தில் கொரோனா பரவுவதை தடுக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்நிலையில்,புதுக்கோட்டை  மாவட்டத்தில், தற்போது புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதாவது , இனி வாரத்துக்கு 3 நாட்கள் மட்டுமே மளிகை கடைகளை திறக்க வேண்டும் என்று ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.மேலும் உத்தரவை மீறும் மளிகைகடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை  எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.திங்கள், புதன், வெள்ளி உள்ளிட்ட 3 நாட்கள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மளிகை கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்