டி.டி.வி.தினகரன் தகவல்…புதிய கட்சியின் பெயர் அறிவிக்கப்படும்….

வருகிற 15ஆம் தேதி சென்னை ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.வான டிடிவி தினகரன்  புதிய கட்சியை தொடங்குகிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுகவை மீட்டெடுக்கும் வரை, அங்கீகரிக்கப்பட்ட ஓர் அரசியல் இயக்கமாக தொடர்ந்து பயணிப்பதற்கான பெயரையும், சின்னத்தையும் வேண்டி டெல்லி உயர்நீதிமன்றத்தில் விடுக்கப்பட்ட கோரிக்கை ஏற்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இதை தொடர்ந்து வருகிற வியாழக்கிமை அன்று மதுரை மாவட்டம் மேலூரில் காலை 9 மணி அளவில் நடைபெறும் விழாவில், புதிய கட்சியின் பெயரை அறிவித்து கொடியை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது கட்சியின் கொடியேற்றும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment