குணமடைந்த 74 வயது மூதாட்டிக்கு பழக்கூடை கொடுத்து வழியனுப்பி வைத்த மருத்துவர்கள்.!

Default Image

தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 21 பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்திருந்தார். இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் 738 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்திருந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் நேற்று முன்தினம் வரை 19 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், நேற்று மேலும் 2 பேர் வீடு திரும்பியுள்ளதாக கூறினார். இதில் ஒருவர் 74 வயது மூதாட்டி குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

இதுதொடர்பாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், கடந்த மார்ச் 26ம் தேதி பொழிச்சலூரை சேர்ந்த 74 வயது மூதாட்டி மூச்சுத்திணறால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில் தற்போது அவர் முழுமையாக குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி இருக்கிறார். மேலும் குணமடைந்த மூதாட்டிக்கு மருத்துவக் குழுவினர் பழக்கூடை கொடுத்து வழியனுப்பி வைத்தனர் என ராஜீவ் காந்தி மருத்துவமனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 30042025
geetha jeevan About Magalir Urimai thogai
NTK Leader Seeman
vishal nassar karthi
Vijaya prabhakaran - DMDK