கொரோனா தாக்கத்தை பொறுத்தே ஊரடங்கு நீட்டிக்கப்படும்.! – தமிழக முதல்வர்.!

Default Image

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா வைரஸ் தடுக்க, அமைக்கப்பட்ட 12 குழுக்களுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார். அதன் பின்னர் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய முதல்வர் , தமிழகத்தில் இன்னும் 344 பேரின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளன. எனவும், 4 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்டு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது என்றும், இன்றிரவு தமிழகத்திற்கு முதலில் 50 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட் வந்துவிடும். என்றும் கூறினார்.

மேலும், தமிழகத்தில் கொரோனா தொற்று 2-வது நிலையில் உள்ளது. அது, 3-ஆம் நிலைக்கு செல்ல வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார். இதன் காரணமாக கொரோனா தொற்று தாக்கத்தை பொறுத்தே ஊரடங்கு நீட்டிக்கப்படும் எனவும் முதல்வர் தெரிவித்தார்.

நாளை மறுநாள், பிரதமர் மோடி, அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னர் ஊரடங்கு பற்றிய முக்கிய முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஒடிசா மாநில முதல்வர், அம்மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டித்து இன்று உத்தரவிட்டுள்ளார்.  

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்