இந்தியாவில் ஒரே நாளில் மேலும் " 386 பேருக்கு கொரோனா" உறுதி .!

Default Image

உலகை உலுக்கிவரும் கொரோனா வைரஸின் தாக்கத்தால் இதுவரை கொரோனாவால் 1,363,123 பேர் பாதிக்கப்பட்டும் ,
76,383 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 293,839 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

 இந்தியாவில் கொரோனா வைரஸால்  நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோர் , இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துகொண்டே  இருக்கிறது. கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த பிரதமர் மோடி நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய , மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  இந்தியாவில் கொரோனாவால்  4,421 பேர் பாதிக்கப்பட்டு இருந்தநிலையில் தற்போது 4,789பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து 353 பேர்  வீடு திரும்பியுள்ளதாகவும் , 124 பேர்  உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா , தமிழ்நாடு  ,கேரளா  டெல்லி போன்ற மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களில் தினமும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்