இந்தியா மற்றும் பிரான்ஸ் தீவிரவாதத்திற்கு எதிரான கூட்டுப் போராட்டம் தொடரும்!
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தீவிரவாதத்திற்கு எதிராக பிரான்ஸூம்,இந்தியாவும் கைகோர்த்து பணியாற்றும் என அந்நாட்டு கூறினார்.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். மக்ரோனை பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்திற்கு நேரடியாகச் சென்று வரவேற்றார். மக்ரோனுடன் அவரது மனைவி ப்ரிஜித் மற்றும் அந்நாட்டின் மூத்த அமைச்சர்கள் உடன் வந்திருந்தனர்.
இதை தொடர்ந்து மக்ரோன் மற்றும், பிரதமர் மோடி இடையே இன்று முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் இரு நாடுகள் இடையே விண்வெளி, கடல்பாதுகாப்பு, ரயில்வே, அணுஆயுதம், பொருளாதாரம், தொழில், சூரிய மின்சக்தி தொடர்பான 14 ஒப்பந்தங்கள் கையொழுத்தாகின.
பின்னர் இருவர் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.
அதில் பிரதமர் மோடி கூறுகையில் ‘‘இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே உறவு வலுவடைந்துள்ளது. இந்த சந்திப்பின் மூலம் இருநாடுகளும் பல்வேறு துறைகளில் இணைந்து பணியாற்ற முடியும். பாதுகாப்பு துறையில் பிரான்ஸ் முதலீடு செய்யும் என எதிர்பார்க்கிறோம்’’ எனக் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் மக்ரோன கூறுகையில் ‘‘தீவிரவாதம் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. பாதுகாப்பு துறையில் இந்தியாவும், பிரான்ஸூம் இணைந்து செயல்படும்’’ எனக்கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்