மாணவி அஸ்வினி உடலுக்கு அமைச்சர் பெஞ்சமின் அஞ்சலி!
அமைச்சர் பெஞ்சமின் சென்னையில் நேற்று கொலை செய்யப்பட்ட மாணவி அஸ்வினி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அஸ்வினியின் தாய் மற்றும் உறவினர்களுக்கு பெஞ்சமின் ஆறுதல் தெரிவித்தார். சென்னை கே.கே.நகரில் மீனாட்சி கலை கல்லூரி மாணவி அஸ்வினி நேற்று குத்திக்கொலை செய்யப்பட்டார்.
அழகேசன்(24) என்ற இளைஞரால் கழுத்தை அறுத்து படுகொலை செய்தார். இதனையடுத்து பொதுமக்கள் அவரை துரத்தி பிடித்து சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்.அடுத்தகட்ட விசாரணையானது நடைபெற்று வருகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.