எம்ஜிஆர், கருணாநிதியாக மாறி கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய நபர்கள்

Default Image

பட்டுக்கோட்டையை சேர்ந்த குருச்சரனும் ,தஞ்சாவூரை சேர்ந்த துரை என்பவரும் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக எம்ஜிஆர் மற்றும் கருணாநிதி வேடமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.அந்த வகையில்,தற்போது  உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது.இதன் விளைவாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்ககைள் எடுத்து வருகிறது.குறிப்பாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் அரசுகளும் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் எம்ஜிஆர் வேடத்தில் குருசரணும் ,கருணாநிதி வேடத்த்ஹில் துரையும் இணைந்து ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வரும் நபர்களிடையே கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்