இந்தியாவில் கொரோனா பலி 83 ஆக உயர்வு..பாதிப்பு 3,500-ஐ தாண்டியது.!

Default Image

உலக முழுவதும் கொரோனா வைரஸ் பரவி இருப்பதால் தினமும் பாதிப்பும், பலியும் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா  வைரஸ் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளான அமெரிக்கா, பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளில் பாதிப்பு மட்டுமில்லாமல் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. உலகளவில் பாதித்தவர்களின் எண்ணிக்கை 12,25,058 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66,504 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களில் 2,53,855 பேர் குணமடைந்துள்ளார்கள்.

இந்த நிலையில், இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,374 லிருந்து 3577 ஆக அதிகரித்துள்ளது. கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 77 லிருந்து 83 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 275 குணமடைந்துள்ளார்கள் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 635, தமிழ்நாடு 571, டெல்லி 503, கேரளா 306 போன்ற மாநிலங்களில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்