இந்திய அரசு கொரோனாவை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பிரதமர் மோடி வரும் ஞாயிறு இரவு 9 மணிக்கு, 9 நிமிடங்கள் விளக்கை எரிய விட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்நிலையில், இதுகுறித்து மேயாத மான் பட இயக்குனர் ரத்னகுமார் அவர்கள் , ‘ வாசலில் நின்று கை தட்ட சொன்னதுக்கு கூட்டமாக நின்று தட்டை தட்டிய மக்களுக்கு கண்டனங்கள் தெரிவித்திருக்கலாம். இப்பொது அடுப்பாய் பற்ற வைக்க கூட வசதியில்லாத மக்களை விளக்கை ஏற்ற சொல்கிறார். சற்று பயமாக இருக்கிறது.’ என தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.