கொரோனாவால் அமெரிக்காவில் லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலையிழந்துள்ளனர்.!

Default Image

கொரோனா வைரஸ் தொற்றால் உலக வல்லரசு நாடு என கூறப்படும் அமெரிக்கா தற்போது மிகுந்த பாதிப்புள்ளாகி வருகிறது. இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக அங்கு பலரும் தங்களது வேலைகளை இழந்துள்ளனர். 

இதுவரை 5 கோடி பேர் தங்களது வேலையை இழந்துள்ளனராம். இதில் லட்சக்கணக்கான இந்தியர்களும் உள்ளனராம். வெளிநாட்டில் இருந்து அமேரிக்கா சென்று வேலைபார்ப்பவர்களில் 67 சதவீதத்தினர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் வேலை செய்வதற்கு வெளிநாட்டினர் எச்.1.பி விசா எடுத்து 3 ஆண்டுகள் வரை வேலை செய்துகொள்ளலாம். அடுத்த 3 ஆண்டுகள் கழித்து மீண்டும் புதுப்பித்துக்கொள்ளலாம். வேலையின்றி அமெரிக்காவில் 60 நாள் மட்டுமே தங்கயிருக்க முடியும். அதற்க்குள் நாடு திரும்பிவிட வேண்டும். இந்த நீட்டிப்பு காலத்தை 90 நாட்களாக அதிகரிக்க தற்போது வேலை இழந்த இந்தியர்கள் அமெரிக்க அரசிடம் கோரிக்கை வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனாவால் இதுவரை 5 கோடி பேர் வேலையிழந்துள்ளதை அடுத்து இம்மதத்திற்குள் அந்த எண்ணிக்கை 7 கோடியாக இருக்கும் எனவும், 2 ஆம் உலகப்போருக்கு பின்னர் அமெரிக்காவில் ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார பின்னடைவு இதுதான் எனவும் பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tamil news
mk stalin TVK VIJAY
Gujarat Titans vs Rajasthan Royals
donald trump Tax
Thirumavalavan VCK
Ghibli Cyber Crime
TN CM MK Stalin - TN BJP Leader Annamalai