பாதுகாப்பு துறையில் இன்னும் அதிகளவில் பெண்கள் நியமனம் செய்யப்படுவார்கள் : மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு

டெல்லியில் மத்திய பாதுகாப்பு துறையின் மருத்துவ பிரிவு பெண் அதிகாரிகள் அமைப்பின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.

அப்போது அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், இந்தியாவில் நிலவும் பெண்களுக்கெதிரான பல்வேறு சூழ்நிலைகளை சமாளித்து பெண்கள் வெற்றி பாதையில் பயணம் செய்கின்றனர். எனவே அவர்கள் சிறப்பான வெற்றியை பெற்று வாழ்வில் உச்ச நிலையை அடைகின்றனர். மேலும் இதை கருத்தில் கொண்டு வரும் காலங்களில் பாதுகாப்பு துறையில் இன்னும் அதிகளவில் பெண்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

Leave a Comment