இந்தியா மகளிர் ஹாக்கி அணி வலுவான கொரியாவையே வீழ்த்தி அபார வெற்றி!

Default Image

கொரியாவுக்கு எதிரான  மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியை பெற்றது.

மகளிர் ஹாக்கி போட்டி நேற்று தொடங்கிய 2-வது நிமிடத்திலேயே இந்திய வீராங்கனை குருஜித் கௌர் அற்புதமாக கோல் அடித்து இந்திய அணியின் கணக்கை தொடக்கி வைத்தார். பின்னர் தீபிகா 14-வது நிமிடத்தில்  2-வது கோலை பதிவு செய்தார்.

இதனையடுத்து இந்திய அணி கொரியாவுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்தது. மேலும் சிறப்பான தடுப்பாட்டத்தையும் வெளிப்படுத்தி கொரிய வீராங்கனைகளை திணறடித்தது.

இந்த நிலையில், 47-வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை பூணம் ராணி ஒரு கோல் அடித்தார். இதனால் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது.

கடைசியாக கொரிய வீராங்கனை மீ ஹியூன் பார்க் 57-வது நிமிடத்தில் அந்த அணிக்கு ஆறுதல் கோல் அடித்தார். இதனால் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியைப் பெற்றது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்