பிரான்ஸ் அதிபருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு!

குடியரசுத் தலைவர் மாளிகையில்  இந்தியா வந்துள்ள பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் மனைவி பிரிகிட் மேரி கிளாட் (Brigitt Marie Claude) மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோருடன் 4 நாள் பயணமாக நேற்று இரவு டெல்லி வந்தார். அவரை பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்திற்கு நேரில் சென்று கட்டி அணைத்து வரவேற்றார்.

தொடர்ந்து குடியரசு தலைவர் மாளிகையில் இமானுவல் மேக்ரான் மற்றும் பிரிகிட் மேரி கிளாட் ஆகியோரை குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த் அவரது மனைவி சவீதா கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் வரவேற்றனர் இதனைத் தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பிரான்ஸ் அதிபர் மேக்ரன் ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Leave a Comment