ஒருநாள் ஊதியத்தை வழங்க உள்ள போக்குவரத்து ஊழியர்கள்

Default Image
கொரோனா தடுப்பிற்கு ஒருநாள் ஊதியத்தை வழங்க உள்ளனர் போக்குவரத்து ஊழியர்கள்.
 
கொரோனா வைரஸ் அதிகமாவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மத்திய மாநில அரசுகள் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்களிடம் நிதியுதவி கேட்டுக்கொண்டுள்ளது. இதற்காக பலரும் தங்களால் இயன்ற நிதியுதவிகளை அளித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் பழனிசாமி கொரோனா தடுப்பு பணிக்காக விருப்பம் உள்ளவர்களை நிதி அளிக்கலாம் என்று தெரிவித்திருந்தார்.அதன்படி பல்வேறு தரப்பினரும் நிதி உதவி வழங்கி வருகின்றனர்.
 
இந்நிலையில் போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களது ஒருநாள் ஊதியமான ரூ.14 கோடியை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கவுள்ளனர் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்