சென்னை கல்லூரி மாணவி அஸ்வினி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு  கண்டனம்!

Default Image

துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், சென்னையில் கல்லூரி மாணவி அஸ்வினி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு  கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும்; குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். பகுத்தறியும் பண்பான இளம் தலைமுறையால் தமிழகம் தலைநிமிர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், மாணவி அஸ்வினி கொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சியும், மனவேதனையும் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மனிதநேயமற்ற, மனித உணர்வுகளை மதிக்காத, இத்தகு வன்செயல்கள் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்