சி.என்.என் செய்தி தொகுப்பாளருக்கு கொரோனா உறுதி.!

கொரோனா வைரஸ் உலக நாடுகளை மிரட்டி வருகிறது. அமெரிக்காவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது. மேலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 80 ஆயிரத்தை தாண்டியது.

இந்நிலையில் அமெரிக்காவின் பிரபலமான சி.என்.என் தொலைக்காட்சி செய்தி தொகுப்பாளராக இருக்கும் கிறிஸ் குவோமோவுக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது.

தற்போது கிறிஸ் குவோமோ நலமாக இருப்பதாகவும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் “கியூமோ பிரைம் டைம்” நிகழ்ச்சியை  தனது வீட்டில் இருந்து பங்கேற்பார் என சி.என்.என் அறிவித்துள்ளது.

சி.என்.என்  தலைமை அலுவலகத்தில் இதுவரை 3 பேருக்கு கொரோனா கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தடுக்க பல சி.என். என் ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்றி வருகின்றனர். நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் வீடு மற்றும் சிறிய ஸ்டுடியோக்களில் இருந்து வேலை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

author avatar
murugan