நிவாரண நிதிக்கு ரூ.100 கோடி வழங்க எஸ்.பி.ஐ. முடிவு

பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.100 கோடி வழங்க எஸ்.பி.ஐ. முடிவு செய்துள்ளது .
கொரோனா வைரஸ் இந்தியாவில் தற்போது அதிவேகமாக பரவி வருகிறது.இந்த வைரசால் இந்தியாவில் இதுவரை 1000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.இதனால் பல்வேறு தொழில் முடங்கியுள்ளது.
எனவே பிரதமர் மோடி கொரோனா தடுப்பு பணிக்கு தங்களால் இயன்ற நிதியுதவி அளியுங்கள் என பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.வேண்டுகோளை ஏற்று பலரும் நிதி உதவி அளித்து வருகின்றனர்.இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.100 கோடி வழங்க எஸ்.பி.ஐ. முடிவு செய்துள்ளது . பிரதமரின் நிவாரண நிதிக்கு 2.56 லட்சம் எஸ்.பி.ஐ. வங்கி ஊழியர்கள் தங்களின் 2 நாள் ஊதியத்தை வழங்க முடிவு செய்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!
March 16, 2025
சுனிதா – வில்மோரை மீட்கும் பணி வெற்றி.! பூமிக்கு திரும்பும்போது என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள்?
March 16, 2025