கொரோனா தொற்றால் லண்டனில் மரணித்த பாகிஸ்தான் ஸ்குவாஷ் நட்சத்திரம்.!

கொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 7 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை இந்த வைரஸ் பாதித்துள்ளது. 37 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இந்த கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாகிஸ்தான் ஸ்குவாஷ் முன்னாள் நட்சத்திர வீரர் ஆஸம் கான்பலியாகியுள்ளார். பிரிட்டிஷ் ஓபன் ஸ்குவாஷ் தொடரில் பங்கேற்று 1959, 1960, 1961 ஆகிய ஆண்டுகளில் வென்று ஹாட்ரிக் சாதனை படைத்திருந்தார். இவர் 1956ல் இருந்து இங்கிலாந்தில் வசித்து வந்துள்ளார்.
95 வயதான இவர் கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு லண்டன் ஈலிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனை தொடர்ந்து ஆஸம் கான் கடந்த சனிக்கிழமை காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025