தமிழகத்தில் இதுவரை சுமார் 3,96,147 பேரிடம் கொரோனா தொற்று ஆய்வு!

கொரோனா தொற்று பாதுகாப்பு முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தீவிரமாக பின்பற்றப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.  

இந்நிலையில் தமிழகம் முழுவதும் வீடு வீடாக சென்று கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒவ்வொருவரின் உடல்நிலை குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. இந்த பணிகளில் சுகாதாரத்துறை பணியாளர்கள் 2271 பேர் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை 3,96,147 பேரிடம் இந்த கொரோனா முன்னெச்சரிக்கை கணக்கெடுப்பு நடைபெற்றுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 12 மாவட்டங்களில் கொரோனா பாதிக்கப்பட்டோர் வீடுகளை சுற்றி 7 கிமீ சுற்றளவில்  1,08,677 பேரிடம் இந்த சோதனை நடைபெற்றுள்ளது.