கண்டெய்னர்ரில் கடத்தப்பட்ட ஆட்கள் உயிர் இழந்த பரிதாபம்..,
அமெரிக்காவின் சான் ஆண்டோனியா மாகானத்தில் வால்மார்ட் வாகன நிறுத்தம் உள்ளது. அங்கு கண்டெய்னர் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது.
அப்போது, கன்டெய்னர் லாரியில் 2 பள்ளிக் குழந்தைகள் உட்பட 38 பேர் அடைக்கப்பட்டு இருந்தனர். கன்டெய்னருக்குள் இருந்தவர்கள் வால்மார்ட் ஊழியரிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளனர்.
சரக்கு ஏற்றும் கண்டெய்னரில் மனிதர்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த வால்மார்ட் ஊழியர்கள் போலீசுக்கு தகவல் அளித்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார் கன்டெய்னரில் இருந்த 38 பேரை மீட்டனர். அதில், 8 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டன. மேலும் 20 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் கடத்தி வர பட்டிருக்கலாம் என்று தெரிவித்தனர்..