ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன் கொரோனா தடுப்புக்காக சிறப்பு நிதி வழங்கினார்.!

Default Image

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் அன்றாட வாழ்வு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள், பெரு நிறுவனங்கள் முடங்கிப்போய் உள்ளது. முறைசாரா அமைப்புகளில் வேலைசெய்துவந்த தினக்கூலி தொழிலாளார்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நெருக்கடியான சூழ்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியும், மாநில முதல்வர்களும் பொதுமக்களிடம் தங்களால் இயன்ற நிதியுதவிகளை அரசிற்கு கொடுக்க கோரிக்கை வைத்தனர்.

இதனை தொடர்ந்து பலரும் தங்களால் இயன்ற நிதியுதவிகளை செய்து வந்தனர். பல திரை பிரபலங்கள், தன்னார்வலர்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வந்தனர்.  

இந்நிலையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மதுரை சிறையில் தண்டனை அனுபவித்து வரும் ரவிச்சந்திரன் ரூ.5,000 சிறப்பு நிதி வழங்கினார். இந்த நிதியை கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ரூ.5,000-ஐ அவர் வழங்கியுள்ளார். இவர் இதற்கு முன்னர் ஏற்கனவே ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் அமையும் தமிழ் இருக்கைக்காக நிதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 15042025
Today Live 14042025
weather update rain to heat
good bad ugly ajith ilayaraja
Madurai MP Su Venkatesan
Harris Jayaraj
Nellai Palayamkottai 8th student
MK Stalin