தமிழகத்தில் 4,100 பேர் மீது வழக்குப்பதிவு.!

Default Image

தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 4,100 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு (144 தடை) அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வீட்டை விட்டு யாரும் வெளிய வர கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அப்படி அரசு உத்தரவை மீறி வருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கபடும் என அந்தந்த மாநில அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்று முதலவர் பழனிசாமி தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், 144 தடை உத்தரவை மீறி வாகனங்களில் பயணம் செய்தோர் மற்றும் வெளியே தேவையில்லாமல் சுற்றியவர்கள் மீது காவல்துறை வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம், 1252 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. நேற்று 2,848 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது 4,100 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

MS Dhoni OUT
Chennai Super Kings vs Kolkata Knight Riders
mp kanimozhi
Chennai Super Kings vs Kolkata Knight Riders toss
BJP MLA Nainar Nagendran
amitshah about dmk