கொரோனா தடுப்பு நிவாரண பணிக்காக நன்கொடை வழங்கிய பி.வி.சிந்து!

முதலில் சீனாவில் தொடங்கிய இந்த நோயானது, தற்போது இந்தியாவிலும் நூற்றுக்கணக்கான மக்களை பாதித்துள்ளது. இதனையடுத்து,இந்த நோய் மேலும் பரவாமல் தடுப்பதற்காக இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிக்காக  பிரபலங்கள் பலரும் உதவி கரம் நீட்டி வருகிற நிலையில், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆந்திரா, தெலுங்கானா மாநில முதல்வரின் நிவாரண நிதிக்கு தலா ரூ.5 லட்சத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.