கொரோனோ தடுப்பு நடவடிக்கை…சென்னையில் ஆட்கள் செல்ல முடியாத இடங்களுக்கும் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி தொடங்கியது…

Default Image

சென்னை மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி,  மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் தூய்மை காவலர்கள் பல்வேறு சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மாநகராட்சி பகுதிகளில் சிறிய மோட்டாா் பொருத்திய தெளிப்பான்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோல், ட்ரோன் கருவி மூலம் வானில் பறந்தபடியே ஆள்கள் செல்ல முடியாத இடங்களுக்கும் சென்று  கிருமி நாசினிகளைத் தெளிக்கும் பணியும் தற்போது நடைபெற்று வருகிறது. ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் திட்டம் குறித்து  சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விளக்கினார். மேலும்,  கொரோனா தொற்று என சந்தேகித்து தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் உள்ளவர்களை  மருத்துவ குழுக்கள் மூலம் தொடர்ச்சியாக  கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்  எனவும்  அவர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 18042025
SRH Lose MI in ipl 2024 april 17
ADMK Chief secretary Edappadi Palanisamy
Nainar Nagendran - Annamalai
Mumbai Indians
SRHvsMI