இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 606லிருந்து 649ஆக அதிகரிப்பு.!

Default Image

இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 606 லிருந்து 649 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 124, கேரளாவில் 118 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் இந்தியர்கள் 602 பேர், வெளிநாட்டினர் 47 பேர் என 649 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு விடப்பட்டுள்ளது. இதனால் மத்திய, மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது. இதனிடையே இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக இருந்த நிலையில், குஜராத் மாநிலத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 70 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் இந்தியாவில் கொரோனவால் உயிரிழப்பின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Lucknow Super Giants won
Saidai duraisamy
Carlsen Anna Cramling
Kolkata Knight Riders vs Lucknow Super Giants
tamilisai tvk vijay
sunil gavaskar rohit sharma mi