கொரோனா விழிப்புணர்வு! பெங்களூரில் பாடல் பாடி விழிப்புணர்வை ஏற்படுத்திய பெண் காவல் அதிகாரி!

இந்தியா முழுவதும் பாரத பிரதமர் நரேந்திர மோடி, ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். இதனால் அனைத்து பள்ளி, கல்லூரி, திரையரங்குகள் மற்றும் மக்கள் கூடும் வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, காவல்துறையினர், திரையுலக பிராபாலங்கள் மற்றும் மற்ற பிரபலங்கள் அனைவரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பெண் காவல் அதிகாரி தபாராக் பாத்திமா என்பவர், பெங்களூருவில் பாடல் பாடி கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.