BREAKING: நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு.! பிரதமர் மோடி.!

Default Image

அனைத்து மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களுடன் பிரதமர் மோடி காணொளி மூலம் ஆலோசனை நடத்தி பிறகு நாட்டு மக்களிடம் மோடி உரையாற்றினார்.

அதில், கொரோனா யாரையும் விட்டுவைப்பதில்லை நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.ஒவ்வொரு இந்தியரும் எனக்கு முக்கியம் எனவே ஊரடங்கிற்கு ஒத்துழைக்க வேண்டும்.

மேலும் இன்று இரவு 12 மணி முதல் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு என பிரதமர் மோடி கூறினார். மக்கள் கட்டுப்பாட்டுடன் இல்லை என்றால் நாம் அழிவை சந்திக்க நேரிடும்.

குறைந்த பட்சம் 21 நாட்கள் ஊரடங்கை பின்பற்ற வேண்டியது முதற்கட்ட தேவையாக உள்ளது என மோடி கூறினார். முழுமையான பொறுப்போடு ஒரு நாள் சுய ஊரடங்கை ஒவ்வொரு இந்தியர்களும் கடைபிடித்தார்கள்(கடந்த ஞாயிற்றுக்கிழமை) .

நாட்டில் முழு ஊரடங்கை கடைபிடிக்காவிட்டால் பல குடும்பங்கள் பெரிய அளவுக்கு பாதிக்கப்படும் என்று நாட்டு மக்களிடம் உரையாற்றும் போது கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்