பிற ஏடிஎம்களில் பணமெடுக்க கட்டணம் கிடையாது!-நிர்மலா சீதாராமன்

Default Image

டெல்லியில் சற்றுநேரத்திற்கு முன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, பிற வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்க மூன்று மாதங்ககளுக்கு கட்டணம் எதுவும் விதிக்கப்படாது என நிர்மலா சீதாராமன் கூறினார்.

மேலும், வங்கி சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை வைக்க வேண்டும் என்பதில் விலக்கு எனவும், வங்கி கணக்கை ஸிரோ பேலன்சில் வைத்துக்கொள்ளவும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

வங்கிகளுக்கு நேரில் செல்வதை தவிர்த்து, டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை செய்யுமாறு நிர்மலா சீதாராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், நிர்மலா சீதராமன் இந்த அறிவிப்பை அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்