அரசின் அறிவுரையை ஏற்காமல் அலட்சியம் செய்த மேலூர் இறைச்சி கடைகாரர்கள்… அலட்சியத்தால் அழிந்து கொண்டிருக்கும் இத்தாலி குறித்து அறியவில்லை போலும்…

Default Image

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று  நேற்று மக்கள் ஊரடங்கு உத்தரவை சிறப்பாக  கடைப்பிடித்தனர். மக்கள்  காலை 7 மணி முதல் மாலை 5 மணி யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் முக்கிய வணிக நிறுவனங்கள் மற்றும் சிறு குறு வியாபாரிகள், இறைச்சிக் கடைகள் உள்ளிட்ட அனைத்தும்  இயங்காது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி மதுரை மாவட்டத்தில் பல பகுதிகளில் அரசின் உத்தரவை ஏற்று மக்கள் ஊரடங்கிற்க்கு முழு ஒத்துழைப்பு அளித்தனர்.தூங்கா நகரான மதுரையே ஒரு பகல் பொழுது முவதும் தூங்கி ஓய்வெடுத்தது என்றே சொல்லலாம். ஆனால்,  மதுரை மாவட்டம் மேலூரில் அதிகாரிகளின் அறிவுரைகளை பொருட்படுத்தாமல் வழக்கம்போல அலட்சிய்யமாக இறைச்சிக் கடைகளை திறந்து வியாபாரத்தை துவங்கியதால் வழக்கம்போலவே மக்கள் கூட்டமும்  இறைச்சி வாங்க அலைமோதியது. அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி இன்று நிலவும் கிராக்கியை கருத்தில் கொண்டு கல்லா கட்டுவதற்காக மேலூர் இறைச்சிக் கடையாளர்கள் செய்த இந்த விபரீத முயற்சியால் மேலூரில் இறைச்சியை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதினர். இந்த நிகழ்வு அனைவரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது. இத்தாலில் அரசின் அறிவுரையை அலட்சியம் செய்ததால் அழிந்து வருகிறது என்பதை அறிந்து மேலுர் இறைச்சி கடைகாரர்களுக்கு தெரியவில்லை போலும். எனவே அரசு கூறும் அறிவுரையை ஏற்று கொரோனாவை கட்டுப்படுத்த அனைவரும் முன்வர வேண்டும் என்று சமுக ஆர்வாலர்கள் கருதுகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 30042025
Punjab won the toss and elected to field
Rajinikanth
geetha jeevan About Magalir Urimai thogai
NTK Leader Seeman