சிறையில் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி.!
இலங்கையில் உள்ள அநுராதரபுரம் சிறையில் நான்கு கைதிகளுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டது.இதனால் அந்த நான்கு கைதிகளையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான்கு கைதிகளில் ஓருவருக்கு வைரஸ் இருப்பதாக மற்ற கைதிகளுக்கு மத்தியில் தகவல் பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த கைதிகள் சிறையை உடைத்து கொண்டு தப்ப முயன்றனர்.
இதையடுத்து சிறையில் நுழைந்த போலீசார் கைதிகளை கட்டுப்படுத்த துப்பாக்கிச்சூடு நடத்தினர்.இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.