தொடங்கியது சுய ஊரடங்கு!நிசப்தமானது இந்தியா..பொறுப்புடன் பொதுமக்கள் கடைபிடிப்பு…வெறிச்சோடிய சாலைகள்

Default Image

இன்று (மார்ச்.,22 ) இந்தியா முழுவதும் சரியாக காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை கிட்டத்தட்ட அதாவது 14 மணி நேரம் முழு அடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 4 ஆவது வாரத்தில் கொரோனா 3 ஆவது நிலையை அடைவதிலிருந்து தடுக்க இன்று சுய ஊடரங்கு கடைபிடிக்கப்படுகிறது.. அதன்படி இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் உள்ள கடைகள், டாஸ்மாக் கடைகள் இயங்காது. அது போல் மெட்ரோ ரயில் பயணிகள் ரயில், பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆட்டோ, கால் டாக்சி, லாரிகளும் ஓடாது. விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Image

என்ற போதிலும் அத்தியாவசிய தேவைகளான மருத்துவமனைகள், மருந்து கடைகள் போன்றவை இன்று திறந்திருக்கும் என கூறப்பட்டுள்ளது.அதே போல் பள்ளி, கல்லூரிகள், மால்கள், தியேட்டர்கள், கோயில்கள், சுற்றுலா தலங்கள் போன்றவைகளும் மார்ச்., 31ஆம் தேதி வரை மூடப்பட்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா முழுவதும் சுய ஊரடங்கு தொடங்கியது.அதன் ஒரு பகுதியா அனைத்து சாலைகளிலும் மக்கள் நடமாட்டம் அரிதாகி உள்ளது.இதே போல் சென்னையில் அனைத்து கடற்கரைகளும் மூடப்பட்டுவிட்டது.பொதுமக்களும் பொறுப்போடு இந்த சுய ஊரடங்கை கடைபிடித்து வருகின்றனர்.இதனால் எங்கும் காணப்படும் மக்களின் நடமாட்டம் இன்றி சாலைகளும் பிற இடங்களும் அமைதியாக காணப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்