முன்பு நிபா, வெள்ளம்.! தற்போது கொரோனாவால் 3-வது முறையாக திருமணம் ஒத்திவைப்பு .!

Default Image

கேரளா மாநிலம்  கோழிக்கோட் அருகே உள்ள இரணிபள்ளம் பகுதியை சார்ந்தவர் பிரேம்சந்திரன் ( 26) , சான்டிரா சந்தோஷ் (23). இவர்களுக்கு கடந்த 2018-ம் ஆண்டு மே 20-ம் தேதி  திருமணம் நடைபெற இருந்தது.

ஆனால் மே மாதம் கேரளாவில் பரவிய நிபா வைரஸால் 17 பேர் பலியாகினர். இதனால் நிபா வைரஸ்  குறைந்தபின் திருமணம் நடத்தி விடலாம் என நினைத்தனர்.எதிர்பாராதவிதமாக மணமகனின்  உறவினர் ஒருவர் இறந்த  நிலையில் திருமணம்  ஒரு வருடத்திற்கு தள்ளி போனது.

பின்னர் கடந்த ஆண்டு ஓணம் பண்டிகையை ஒட்டி திருமணம் நடத்த இருந்தனர்.ஆனால் பெருவெள்ளம் ஏற்பட்டு 2-வது முறையாக திருமணம் ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டு முறை திருமணம் நின்றதால் இந்த மார்ச் மாதம் திருமணம் நடத்த உறவினர்கள் முடிவு செய்தனர்.

இதற்காக மண்டபம் ,2 ஆயிரம் பத்திரிகைகள் அச்சடிக்கப்பட்டு உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் கொடுத்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் ஒன்றாக கூடுவதற்கு அரசு தடை விதித்தது.

இதனால்3-வது முறையாக திருமணம் ஒத்தி வைக்கப்பட்டது. வரும் செப்டம்பர் மாதம் திருமணம் நடத்த உள்ளதாக உறவினர்கள் கூறி  உள்ளனர்.கேரளாவில் கொரோனாவால் 40-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்