பால்கனியிலிருந்து கைதட்டி மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்.!

Default Image

உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸின் தாக்கத்தால் இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 10,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதால், உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இந்த வைரஸின் தாக்கத்தால் பிரேசிலில் இதுவரை 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். அதில் 4 பேர் உயிரிழந்ததாக பிரேசில் நாடு அரசு அறிவித்தது. இந்நிலையில், அங்கு பொதுமக்கள் யாரும் வெளியே வரக்கூடாது என பல கடும் கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனாவுக்கு எதிராக பணியாற்றி வரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, பிரேசில் மக்கள் தங்கள் வீடுகளின் பால்கனியில் இருந்த படி கைதட்டியும், கரவொலி எழுப்பியும் கொரோனா வைரசுக்கு எதிராக பாடுபடும் பணியாளர்களுக்கு தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்