பாலிசிதாரர்களே பயப்பட வேண்டாம்..பிரீமியத்தை இப்படி செலுத்துங்கள்-எல்ஐசி அறிவிப்பு

Default Image

கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்படும் பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வருகின்றன. இந்நிலையில், எல்ஐசி தனது பாலிசிதாரர்களுக்கு பிரீமியம், கடன் மற்றும் கடனுக்கான வட்டியை பாதுகாப்பாக செலுத்த கேட்டுக்கொண்டுள்ளது. அவ்வாறு “பீம் யுபிஐ, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, e-wallet மற்றும் இன்டர்நெட் பேங்கிங்” மூலமாக இந்த பிரீமியமை செலுத்த எல்ஐசி அறிவுறுத்தியுள்ளது.

மேலும் எல்ஐசி கூறுகையில் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு மூலம் செலுத்தப்படும் தொகைக்கு எந்த விதமான கூடுதல் கட்டணமும் கிடையாது. மேலும், licindia.in என்கிற இணையதளம் மற்றும் my LIC என்கிற மொபைல் செயலி மூலமாகவும் எல்ஐசி பிரீமியத்தை செலுத்தலாம் என்று தெரிவித்துள்ளது. இந்த வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலமாக வாடிக்கையாளர்களாகிய நீங்கள் நேரடியாக எல்ஐசி அலுவலகத்திற்கு வருவதை தவிர்க்கலாம். மேலும் சந்தேகம் அல்லது விவரங்களுக்கு 022-6827 6827 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று எல்ஐசியின் தென்மண்டல மேலாளர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 17042025
TVK Booth Committee
Madurai Temple Festival
amit shah edappadi palanisamy selvaperunthagai
sanju samson injury
santhanam and str
BJP Former state leader Annamalai - TN Minister Sekarbabu